அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது சென்னை புழல் சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த 14ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அமைச்சர் தரப்பில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜராகி, அமைச்சரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்றார்.
இதற்கு அமலாக்கத்துறை சார்பில் ஆஜரானா கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன் எதிர்ப்பு தெரிவித்தார். இது தரப்பு வாதங்களையும் கேட்ட செசன்ஸ் நீதிபதி அல்லி 20ம் தேதிக்கு (இன்று)தீர்ப்பை ஒத்திவைத்தார். இந்த வழக்கு 77 வது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளதால் இன்று பிற்பகல் 2 மணிக்கு தான் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்ப்பளிக்கப்பட உள்ளது.