Skip to content
Home » அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு….. ஆட்கொணர்வு மனு விசாரணை 27ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு….. ஆட்கொணர்வு மனு விசாரணை 27ம் தேதிக்கு ஒத்திவைப்பு

  • by Senthil

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை 18 மணி நேரம் தனி அறையில் வைத்து டார்ச்சர் செய்ததன் காரணமாக  அவர் மிகவும் பாதிக்கப்பட்டு  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  இதற்கிடையே  அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வு முன்  கடந்த 15-ம் தேதி நடைபெற்றது. அதில் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவனைக்கு மாற்ற அவரது தரப்பு கோரிக்கை வைத்த நிலையில், அதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை அளிக்கவும், அமலாக்கத்துறை தனியாக மருத்துவக்குழு ஒன்றை ஏற்படுத்தி, அவரது உடல்நிலையை காவேரி மருத்துவமனையில் பரிசோதிக்கலாம் என்றும் கூறியுள்ளது. ஆட்கொணர்வு மனு மீது அமலாக்கத்துறை பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவலில் தொடர வேண்டும் என்றும் கூறி வழக்கை ஜூன் 22-ம் தேதி (அதாவது இன்று) ஒத்திவைத்தனர்.

அதன்படி இந்த அந்த மனு, நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கில் செந்தில் பாலாஜி தரப்பில்  வழக்கறிஞர் இளங்கோ ஆஜராகி ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது தான், அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார். எனவே இந்த மனு விசாரணைக்கு உகந்தது தான், அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும்  என வாதிட்டார். இந்த வாதத்தின்போது, வழக்கறிஞர் இளங்கோ,  நடிகர் சஞ்சய்தத், பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் வழக்குகளை உதாரணம் காட்டி வாதிட்டார். நீதிமன்ற காவல் முடிந்ததும், அவரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது.

நீதிபதிகள்: சட்டப்படி விசாரணைக்கு உகந்ததாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்வது உயர்நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது.

அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர்  துஷார் மேத்தா,   அமைச்சர் செந்தில் பாலாஜி, ஆஸ்பத்திரியில் இருக்கும் நாட்களை காவலாக கருதக்கூடாது, ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல.   இதை விசாரிக்கக்கூடாதுஎன்றார்.

தொடர்ந்து இருதரப்பு வழக்கறிஞர்களும் காரசாரமாக வாதங்களை முன்வைத்தனர்.  2 மணி நேரம் வாதம் நடந்தது.

பின்னர் இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என அமலாக்கத்துறை வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!