Skip to content
Home » செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு….11ம் தேதிக்கு ஒத்திவைத்தார்… 3வது நீதிபதி

செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு….11ம் தேதிக்கு ஒத்திவைத்தார்… 3வது நீதிபதி

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து 18 மணி நேரம் டார்ச்சர் செய்தனர்.  இதில் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டார். உடனடியாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில்  அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

நீதிபதிகள் நிஷா பானு,  பரத சக்கரவர்த்தி ஆகியோரைக்கொண்ட அமர்வு முன் இந்த வழக்கு நடந்தது. இதில் நீதிபதிகள் இருவரும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். எனவே தீர்ப்பு 3வது நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டது.  4வது நீதிபதியாக சி.வி. கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். அவர் முன் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அமலாக்கத்துறை சார்பில் அட்டர்னி ஜெனரல் துஷார் மேத்தாவும்,  செந்தில் பாலாஜி மனைவி மேகலா சார்பில் என்.ஆர் இளங்கோவும் ஆஜரானார்கள். அவர்கள் இருவரும் தனித்தனியாக   மனு தாக்கல் செய்தனர். ஏற்கனவே 2 நீதிபதிகளும் எந்த இடத்தில் கருத்து மாறுபாடு கொண்டுள்ளனர் என  அதில் குறிப்பிட்டுள்ளனர்.

ஆட்கொணர்வு  மனு விசாரணைக்கு உகந்தது தான் என ஏற்கனவே இரு நீதிபதிகளும் கூறி உள்ளனர் என என். ஆா். இளங்கோ கூறினார்.

ஆஸ்பத்திரியில் உள்ள காலத்தை தண்டனை காலமாக ஏற்க முடியுமா, முடியாதா என அறிக்கையில் கூறி உள்ளோம் என அமலாக்கத்துறை வழக்கறிஞர் கூறினார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  ஆவணங்களை  யாரும் பார்க்காத நிலையில், ஆவணங்கள் திருத்தப்பட்டதாக கூற முடியாது.  எனவே ஆவணங்களின் அடிப்படையில் வாதிடுங்கள்   மருத்துவமனையில் உள்ள காலத்தை  காவல் காலமாக கருத முடியுமா முடியாதா என்றும் விசாரிக்கப்படும் என்றும் நீதிபதி கூறினார்.

இந்த நிலையில்  செந்தில் பாலாஜி தரப்பில் டில்லி மூத்த  வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராக இருக்கிறார். எனவே வழக்கை வரும் 11ம் தேதிக்கு தள்ளிவைக்கும்படி செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி கார்த்திகேயன், வருகிற 11, 12ம் தேதிகளிலும் இந்த வழக்கில்   விசாரணை நடத்தப்படும் என்றார்.  இதைத்தொடர்ந்து இந்த வழக்கை நீதிபதி வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!