Skip to content
Home » அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கும்படி கவர்னர் எழுதிய கடிதத்தை காட்டுங்கள்… ஐகோர்ட் அதிரடி கேள்வி

அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கும்படி கவர்னர் எழுதிய கடிதத்தை காட்டுங்கள்… ஐகோர்ட் அதிரடி கேள்வி

  • by Senthil

அமலாக்கத்துறை கைது செய்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது இலாகா இல்லாத அமைச்சராக செயல்படுகிறார். அவரை  இலாகா இல்லாத அமைச்சராக நியமித்து முதல்வர் வெளியிட்ட ஆணையை ரத்து  வேண்டும் என்று தேசிய மக்கள் கட்சித்தலைவர்  வழக்கறிஞர் எம்.எல். ரவி,  ராமச்சந்திரன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபூர்வாலா , நீதிபதி ஆதிகேசவலு ஆகியோரை கொண்ட அமர்வில் இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது.  அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதில் தனக்கு விருப்பமில்லை என கவர்னர் ரவி கூறினாரே தவிர , அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும் என எங்கே கூறினார்.  அமைச்சரை நீக்க வேண்டும் என கவர்னர் கடிதம்  எழுதி இருந்தால் அதை காட்டுங்கள். அரசியல் அமைப்பு  சட்டப்படி தான் நாங்கள் செயல்பட முடியும்.  2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தால்  மட்டுமே பதவியை விட்டு நீக்க முடியும்என்று கூறிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைத்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!