Skip to content
Home » அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு 28ம் தேதி வரை காவல் நீடிப்பு

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு 28ம் தேதி வரை காவல் நீடிப்பு

  • by Senthil

அமலாக்கத்துறை அதிகாரிகளால்  ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல்  சிறையில்  அடைக்கப்பட்டுள்ளார். உச்சநீதிமன்றம் அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்தது. அதனைத் தொடர்ந்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தது. செந்தில் பாலாஜியிடம் ஐந்து நாட்கள் விசாரணை நடத்திய பின், மீண்டும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். காவல்  இன்றுடன் முடிவடைந்ததால்,  அவரது காவலை  வரும் 28ம் தேதி வரை நீடித்து  சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!