தி.மு.கழக இளைஞர் அணியின் 2 ஆவது மாநில மாநாடு – மாநில உரிமை மீட்பு முழக்கமாக சேலத்தில் எதிர்வரும் 17ம் தேதியன்று நடைபெறவுள்ளது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டில் – இந்திய ஒன்றியமே திரும்பி பார்க்கிற வகையில் நடைபெறவுள்ள, இந்த பெருமைக்குரிய மாநாட்டுக்கான அழைப்பிதழை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். மேலும் பொதுச் செயலாளர் – நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் வழங்கினார். இவர்களிடம் வாழ்த்து
பெற்றார் அமைச்சர் உதயநிதி. மாநில மாநாட்டின் வெற்றிச் செய்தி – எட்டுத்திக்கும் எதிரொலிக்கும் வகையில் செயலாற்றுவோம். பாசிச கூட்டத்தின் கூடாரத்தை இழுத்து மூடி – மாநில உரிமை மீட்போம் என அமைச்சர உதயநிதி தெரிவித்துள்ளார்.