Skip to content
Home » இலங்கை மலையகத்தமிழர் விழா…முதல்வர் ஸ்டாலின் உரை ஒளிபரப்பு மோடி அரசு தடை

இலங்கை மலையகத்தமிழர் விழா…முதல்வர் ஸ்டாலின் உரை ஒளிபரப்பு மோடி அரசு தடை

  • by Senthil

இலங்கையில் மலையகத்தமிழர்கள் குடியேறி 200 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி இங்கு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பங்கேற்றார். தமிழகத்தின் சார்பில் நிதி அமைச்சர்  தங்கம் தென்னரசு பங்கேற்க இருந்தார். ஆனால் அவர் இலங்கை செல்ல மத்திய அரசு   உரிய நேரத்தில் அனுமதி வழங்கவில்லை. விழா நாளை காலை நடைபெறுகிறது என்றால்  அதற்கு முதல்நாள் இரவில் அனுமதி வழங்கப்பட்டது. எனவே  தங்கம் தென்னரசு இலங்கை செல்ல முடியவில்லை.

இந்த நிலையில் விழா ஏற்பட்டாளர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை பதிவு செய்யப்பட்டு வீடியோ அனுப்பப்பட்டது. அந்த வீடியோவை ஒளிபரப்ப மத்திய அரசு அனுமதி மறுத்து விட்டதால் இலங்கையில் அது ஒளிபரப்பு செய்யப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!