Skip to content
Home » திருச்சி வந்த பிரதமர் மோடி….. மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு

திருச்சி வந்த பிரதமர் மோடி….. மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு

  • by Senthil

திருச்சி விமான நிலையத்தின்  புதிய முனையம் திறப்பு விழாவுக்காக பிரதமர் மோடி இன்று காலை 9.55 மணிக்கு   தனி விமானம் மூலம்  திருச்சி வந்தடைந்தார்.  அதற்கு சற்று நேரத்திற்கு முன்னதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் திருச்சி வந்தார்.  திருச்சி வந்த  பிரதமர் மோடியை  முதல்வர் மு.க. ஸ்டாலின்   வரவேற்றார். கவர்னர்   ரவி,  முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர்  முருகன்,   மற்றும்  அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகள்,  அதிகாரிகளும்  பிரதமரை வரவேற்றனர்.

வரவேற்பு முடிந்ததும்  பிரதமர் மோடி காரில் ஏறி  பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு புறப்பட்டார்.   பிரதமர் காரைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் காரும் சென்றது. அப்போது  விமான நிலையம் முதல், பல்கலைக்கழகம் வரை நின்றிருந்த மக்கள், பாஜக தொண்டர்கள்  பிரதமர் மோடிக்கு  உற்சாக வரவேற்பு அளித்தனர்.  பிரதமரின் கார் மீது மலர்களை தூவி வரவேற்றனர். ஆங்காங்கே நடன நிகழ்ச்சிகளுடனும் பிரதமருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி காரின் முன் இருக்கையில் அமர்ந்தவாறு  மக்கள் வரவேற்புக்கு நன்றி தெரிவித்து கையசைத்தபடி சென்றார்.

விமான நிலையம் முதல்,  பல்கலைக்கழகம் வரை  திமுக, பாஜக கொடிகள் கட்டப்பட்டு இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!