கனிமொழி கருணாநிதி அவர்களின் உதவி எண்ணிற்கு கர்ப்பிணிப் பெண் ஒருவரை வெள்ளம் சூழ்ந்த வீட்டிலிருந்து மீட்டு மருத்துவமனை சேர்க்க வேண்டும் என்று அழைப்பு வந்தது. அதனைத் தொடர்ந்து கனிமொழி எம்.பி அவர்கள் புஷ்பா நகரில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று கர்ப்பிணி பெண்மணியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார். கர்ப்பிணி பெண்மணியை வாகனத்தில் ஏற்ற உதவி செய்த
கனிமொழி,அவரும் அதே வாகனத்தில் மருத்துவமனை வரை உடன் சென்றார். கர்ப்பிணி பெண்மணி மற்றும் அவரது கணவர் ஆகியோர் கனிமொழி கருணாநிதி அவரக்ளுக்கு நன்றி தெரிவித்தார். அப்பகுதி மக்கள் எம்பி கனிமொழி பாராட்டி வருகின்றனர். களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு வரும் எம்பி கனிமொழிக்கு சமூக ஆர்வலர்கள் வாழ்த்தி வருகின்றனர். தென் தமிழகத்தை உலுக்கிய கனமழையில் தூத்துக்குடி மாவட்டம் கடும் பாதிப்பை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.