Skip to content
Home » தஞ்சை மக்களவை திமுக வேட்பாளர் முரசொலி…….. பயோ டேட்டா

தஞ்சை மக்களவை திமுக வேட்பாளர் முரசொலி…….. பயோ டேட்டா

தஞ்சை தொகுதி திமுக வேட்பாளராக  ச. முரசொலி அறிவிக்கப்பட்டுள்ளார்.  தேர்தல் களத்தில் இப்போது தான் இவர் முதன் முதலாக குதித்துள்ளார்.  ஒன்றிய செயலாளராகவும் இருக்கிறார். இவரது  பயோ டேட்டா வருமாறு:

பெயர் – ச.முரசொலி B.Sc, L.L.B
தந்தை பெயர் – கே.சண்முகசுந்தரம்
தாய் – தர்மசமத்தினி
மனைவி – எஸ்.பொற்செல்வி
மகன் – எஸ்.ஆதவன்
தஞ்சாவூர் மாவட்டம் , தஞ்சாவூர் வட்டம், திருவையாறு சட்டமன்ற தொகுதி, தென்னங்குடி கிராமத்தில் எஸ்.கந்தசாமி நாட்டார்  பேரனும் கே.சண்முகசுந்தரம்- தர்மசமத்தினி தம்பதியினரின் மூன்றாவது மகனாக 26.06.1978 ல் பிறந்தார். இவருடைய தாத்தா தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியில் இயக்குநராக இருந்தவர், இவரது தந்தை 1971-ம் ஆண்டு ஊராட்சி மன்ற தலைவராகவும் , தென்னங்குடி தொடக்க வேளாண்மை சங்க தலைவர் பதவி வகித்தவர்.
இவர் இயற்பியல் இளங்கலை பட்ட படிப்பை தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரியிலும் , இளங்கலை சட்ட படிப்பை பெங்களூர் ராம் மனோகர் லோகியா சட்ட பல்கலைக்கழகத்தில் முடித்துள்ளார்.
இவர் 2004 முதல் தென்னங்குடி ஊராட்சி பிரதிநிதியாகவும், 2006 – 2011 வரை தஞ்சாவூர் ஒன்றியக்குழு உறுப்பினராகவும், 2014 – 2020 வரை தி.மு.க பொதுக்குழு உறுப்பினராகவும், 2020 தஞ்சை வடக்கு ஒன்றிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு. 2022 ல் நடைபெற்ற தி.மு.க வின் 15 வது அமைப்பு தேர்தலில் தஞ்சை வடக்கு ஒன்றிய கழக செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!