இப்போதெல்லாம் எதைப்பற்றியும் யோசிக்காமல் தெளிவான மனதுடன் பேட்டிங் செய்து வருவதாக இஷான் கிஷன் கூறியுள்ளார். துலீப் கோப்பை இறுதிப் போட்டியில் 270 ரன்கள் குவித்தது குறித்து பேசிய அவர், இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட நேரத்தில் தான் ஒன்றை உணர்ந்தேன். ஒரு பேட்ஸ்மேனாக ரன்கள் குவிப்பது மட்டுமே நமது வேலை. இதுவே கரியரில் முன்னேற உதவும் என்பதை தெரிந்துகொண்டேன் என்று குறிப்பிட்டார்.
ரன்கள் குவிப்பதே எனது வேலை: இஷான் கிஷன்
