Skip to content
Home » மயிலாடுதுறை பைக் விபத்து….. 3 வாலிபர்கள் கோர பலி

மயிலாடுதுறை பைக் விபத்து….. 3 வாலிபர்கள் கோர பலி

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மெயின் ரோடு பகுதியில் இன்று காலை 10 மணி அளவில்  டூவீலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் கேடிஎம் டூவீலரில் பயணித்த கடலூரை சேர்ந்த முகமது ஷகில், ஹரி, ஆகாஷ் ஆகிய மூவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

இந்த கோர விபத்தில் தரங்கம்பாடியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் படுகாயம் அடைந்தார். இவர் எப்படி இந்த விபத்தில்

சிக்கினார் என்பது தெரியவில்லை.  தகவல் அறிந்து வந்த பொறையார் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடலை மீட்டதுடன் காயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக  மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து  சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து பொறையார் போலீசார் விசாரணை நடத்தினர். பைக் மீது கார் போன்ற 4 சக்கர வாகனம் தான் மோதிவிட்டு நிற்காமல் சென்றிருக்க வேண்டும் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!