Skip to content
Home » நாகையில் அபித குஜாம்பாள் கோயில் தேரோட்டம்…. திரளான பக்தர்கள் தரிசனம்…

நாகையில் அபித குஜாம்பாள் கோயில் தேரோட்டம்…. திரளான பக்தர்கள் தரிசனம்…

  • by Senthil

நாகப்பட்டினத்தில் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த அபித குஜாம்பாள் உடனுறை அமர நந்தீஸ்வரர் சுவாமி திருக்கோவிலின் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா, கடந்த 24,ஆம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கியது. திருவிழாவை முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக சிறப்பு மலர் அலங்காரத்தில் தியாகராஜ சுவாமி அம்பாளுடன் திருத்தேரில் எழுந்தருளினார். அப்போது சுவாமிகளுக்கு சிறப்பு மகா தீபாரதனை நடைபெற்றது. பின்னர்

தேரினை பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து விநாயகர், முருகப்பெருமான் தேர்கள் முன்னே வர, அப்போது தியாகேசா… ஆரூரா.. என பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரினை நான்கு ரத வீதிகள் வழியாக இழுத்து வந்தனர். ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அபித குஜாம்பாள் கோவில் திரு தேரோட்ட திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!