Skip to content
Home » நாகையில் கடல் போல் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 லட்சம் மதிப்புள்ள புதுச்சேரி சாராயம்…

நாகையில் கடல் போல் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 லட்சம் மதிப்புள்ள புதுச்சேரி சாராயம்…

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து நாகை மாவட்டம் பாப்பாகோவிலுக்கு சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று பாப்பாக்கோவில் கிராமத்தில் உள்ள காந்தி என்பவருக்கு சொந்தமான வீட்டில் தனிப்படை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டினுள் கடல் போல் மூட்டை மூட்டையாக சாரய பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சாராயத்தை பாக்கெட் போட்டு சீலிட பயன்படுத்தப்படும் இயந்திரங்கள், ரஸ்னா பாக்கெட் மற்றும் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 600 லிட்டர்

சாராயத்தை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்த பழனி (39) என்பவரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் , நகர் காவல் நிலையத்திற்கு சென்று பறிமுதல் செய்யப்பட்ட சாராய பாக்கெட்டுகளை பார்வையிட்டார். தொடந்து அதிரடி சோதனை நடத்தி, சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த, தனிப்படை போலீசாருக்கு பாராட்டு தெரிவித்த அவர், வெகுமதியும் வழங்கினார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த நாகை நகர காவல் நிலைய போலீசார், சாராய கடத்தல் தொடர்பாக மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!