Skip to content
Home » நாகை அருகே கார் பட்டறையில் தீ விபத்து.. பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்..

நாகை அருகே கார் பட்டறையில் தீ விபத்து.. பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்..

  • by Senthil

நாகை அடுத்துள்ள தெத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ். இவர் வடக்கு பால்பண்ணைச்சேரியில் கார் பட்டறை வைத்துள்ளார். இவருக்கு சொந்தமான கார் பட்டறையில் இருந்து திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், தீ கொழுந்து விட்டு எறிய தொடங்கியதை அடுத்து தீயானது மள, மளவென அடுத்தடுத்த இருந்த ஜோதி என்பவருக்கு சொந்தமான எலக்ட்ரிக் கடை மற்றும் அருகில் இருந்த வீடுகளுக்கும் பரவியது. இதனை கண்ட

பொதுமக்கள் தீயை தண்ணீர் ஊற்றி அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது காற்றின் வேகத்தில் தீ கட்டுக்கடங்காமல் வேகமாக கொழுந்துவிட்டு எரிந்தது. இதையடுத்து நாகை தீயணைப்பு நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து அங்கு தீயணைப்பு வாகனத்தில் விரைந்து வந்த வீரர்கள் தீ அருகருகே உள்ள வீடுகளுக்கு பரவாமல் இருக்க தண்ணீர் ஊற்றி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த திடீர் தீ விபத்தில் கார் பட்டறையில் இருந்த பழைய கார்கள், இன்ஜின்கள், உதிரி பாகங்கள் மற்றும் எலக்ட்ரிக் கடையில் இருந்த மின் சாதனங்கள், வீட்டில் இருந்த வீட்டு உபயோகப் பொருட்கள் என பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின. தீ விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள நாகை தீயணைப்பு நிலைய போலீசார், அது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!