Skip to content
Home » நாகை நாடாளுமன்ற தொகுதியை காங்., கட்சிக்கு ஒதுக்க கோரி தீர்மானம்…

நாகை நாடாளுமன்ற தொகுதியை காங்., கட்சிக்கு ஒதுக்க கோரி தீர்மானம்…

நாகை வெளிப்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளின் நாடாளுமன்றத் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் அமிர்த ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் கணிவண்ணன் கலந்து கொண்டார் இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் மீனவர்கள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பெறப்பட்ட கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் சுற்றுலா தளங்கள் அதிகம் உள்ள நாகை மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட ஒன்றிய நகர காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!