Skip to content
Home » நாகை அருகே மின்சாரம் தாக்கி லைன்மேன் பலி

நாகை அருகே மின்சாரம் தாக்கி லைன்மேன் பலி

  • by Senthil

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள வடுகச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் மகன் வெற்றிவேல் 22 வயதான இவர் வேளாங்கண்ணி பேரூராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் லைன் மேனாக பணியாற்றி வருகிறார் இந்த நிலையில் பேரூராட்சியில் பணியாற்றி விட்டு வீட்டிற்கு செல்லும் வழியில் தண்ணிலப்பாடி கிராமத்தில் தெரு விளக்கு எரியாததால் அதை பழுது நீக்கம் செய்ய கூறியுள்ளனர் அதை

தொடர்ந்து மின்கம்பத்தில் ஏறிய போது எதிர்பாராத விதமாக வெற்றிவேல் மின்சாரம் தாக்கி கீழே விழுந்துள்ளார் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறியுள்ளனர் இதை அடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது இறந்து போன வெற்றிவேலுக்கு திருமணமாகி 1 1/2 ஆண்டுகளே ஆன அவருக்கு 4 மாத பெண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும் இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் நாகை அருகே லைன் மேனே மின்சாரம் தாக்கி உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!