தமிழகத்தில் இரண்டு தினங்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது அதன்படி இன்று காலை முதல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகை, நாகூர், சிக்கல், திட்டச்சேரி, திருமருகல், வேளாங்கண்ணி,பூவைத்தேடி, காமேஸ்வரம், வைரவன்காடு, மணல்மேடு,திருப்பூண்டி,விழுந்தமாவடி, பரவை உள்ளிட்ட இடங்களில் கனமழை செய்து வருகிறது இதனால்
சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது மேலும் தற்பொழுது பல்வேறு பகுதிகளில் சம்பா அறுவடை பணிகள் 10 தினங்களில் துவங்க உள்ள நிலையில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக சம்பா நெற்கதிர்கள் மழையில் சாய்ந்து பெரும் சேதம் ஏற்படும் சூழல் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.