Skip to content
Home » 108 திருவிளக்கு பூஜை… நாகையில் பெண்கள் வழிபாடு…

108 திருவிளக்கு பூஜை… நாகையில் பெண்கள் வழிபாடு…

நாகை மாவட்டம், கீச்சாங்குப்பம் காளியம்மன் கோவிலில் நேற்று 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருவிளக்கு பூஜையில் மஞ்சள், குங்குமம், புடவை, தாலிக்கயிறு உள்ளிட்ட மங்கள பொருட்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. அதனை பூஜித்த பெண்கள், மந்திரங்கள் ஓதி, மனமுறுகி காளியம்மனையும், ஐயப்ப சுவாமியையும் வேண்டிகொண்டனர். பின்னர் இயற்கை பேரிடர்களில் இருந்து உலக மக்களை காக்க வேண்டியும்,

கடலில் மீன்வளம் பெருக வேண்டியும், ஒரே நேரத்தில் அனைத்து பெண்களும் பூஜை மணியை ஒலித்தவாறு சுவாமிக்கு தீபாராதனை செய்து வேண்டிக்கொண்டனர். உலக மக்கள் நன்மை வேண்டி கோவில் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் குத்துவிளக்கேற்றி அம்மனை வழிபாடு செய்தது, அனைவரையும் பக்தி மனத்தில் ஆழ்த்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!