Skip to content
Home » நாகையில் வீடு புகுந்து வக்கீலுக்கு கத்திக்குத்து….

நாகையில் வீடு புகுந்து வக்கீலுக்கு கத்திக்குத்து….

  • by Senthil

நாகப்பட்டினம் , வெளிப்பாளையம் முகமதியார் தெருவை சேர்ந்தவர் முன்னாள் திமுக நகர செயலாளர் போலீஸ் பன்னீர். இவரது மகன் தயாளன் வழக்கறிஞர் , வெளிப்பாளையம் ரயிலடி தெருவை சேர்ந்தவர் சரவணன் வேளாண்மை துறை அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இரண்டு பேரும் உறவினர்கள். கடந்த சில தினங்களாக இரண்டு பேருக்கும் சொத்து பிரச்சனை இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று தயாளன் தனது நண்பர் சங்கரலிங்கத்துடன் தனது வீட்டில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் வந்த சரவணன் மற்றும் அவரது நண்பர் கண்ணன் ஆகியோர் சொத்து குறித்து

தயாளனிடம் பேசினர். இதில் 2 தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த சரவணன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தயாளனை சரமாரியாக குத்தினார். தடுக்க முயன்ற அவரது நண்பர் சங்கரலிங்கத்தையும் கத்தியால் குத்தினர். இதில் பலத்த காயமடைந்த தயாளன், சங்கரலிங்கம் ஆகிய இரண்டு பேரும் சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணன், கண்ணன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இந்தப் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் தயாளன் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!