Skip to content
Home » நாகை…. மாநில கபடி போட்டி…… மயிலாடுதுறை அணிக்கு கோப்பை

நாகை…. மாநில கபடி போட்டி…… மயிலாடுதுறை அணிக்கு கோப்பை

  • by Senthil

நாகை  கீச்சாங்குப்பம் சந்திரசேகரன் நினைவு கபடி கழகம் சார்பில் 32ம் ஆண்டு மாநில அளவிலான கபாடி தொடர் போட்டி நடைபெற்றது‌. நாகை மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்ற இப்போட்டியில் அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், திருச்சி,நாகை, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட 10 மாவட்டங்களை சேர்ந்த 58,அணிகள் பங்கேற்று விளையாடின.

நேற்றிரவு நடைபெற்ற இறுதிப்போட்டியில் அரியலூர் மாவட்டம் வெண்ணங்குழி கபடி அணியுடன், மயிலாடுதுறை மாவட்டம் தொடுவாய் கபடி அணியினர் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் தொடுவாய் ரேணுகாதேவி அம்மன் கபடி அணியினர் 24, புள்ளிகளும் அதனை எதிர்த்து விளையாடிய வெண்ணங்குழி கங்கா பிரதர்ஸ் கபடி அணியினர் 19,புள்ளிகள் பெற்றனர். இப்போட்டியில் தொடுவாய் கபடி அணியினர் கூடுதலாக 5,புள்ளிகள் எடுத்து முதல் பரிசான 40 ஆயிரம் ரொக்கம் மற்றும் 25, ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கோப்பையை தட்டி சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!