Skip to content
Home » நாகை அருகே இரால் பண்ணையில் 1 லட்சம் மதிப்பிலான இரால்கள் திருட்டு…

நாகை அருகே இரால் பண்ணையில் 1 லட்சம் மதிப்பிலான இரால்கள் திருட்டு…

  • by Senthil

நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அடுத்த கருவேலங்கடையில் சந்திரபோஸ் எனபவர்க்கு சொந்தமான இறால் பண்ணை செயல்பட்டு வருகிறது. இங்கு வளர்க்கப்படும் இரால்கள் கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வழக்கம் போல் சந்திரபோஸ் தனது இரால் பண்ணைக்கு சென்ற போது இரால்களை பிடித்துள்ள்ளது தெரிய வந்துள்ளது. இரவில் வலைகளை கொண்டு விற்பனைக்கு தயாராக இருந்த 1 லட்சம் மதிப்பிலான இரால்களை மர்ம நபர்கள் பிடித்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்

வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். நாகை அருகே இறால் பண்ணையில் இரால்களை திருடிச் சென்ற மர்ம நபர்களால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது இதுபோல் இப்பகுதியில் அடிக்கடி மின் மோட்டார்கள் மின் ஒயர்கள் உள்ளிட்டவை அடிக்கடி திருட்டு நடைபெறுவதால் காவலர்கள் இரவு ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் என இறால் உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!