Skip to content
Home » நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சி ஒத்திகை … கலைஞர்களுடன் உரையாடிய எம்பி கனிமொழி..

நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சி ஒத்திகை … கலைஞர்களுடன் உரையாடிய எம்பி கனிமொழி..

  • by Senthil

சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில், நேற்று சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சிக்கான நாட்டுப்புற கலைஞர்கள் ஒத்திகை செய்ய துவங்கியுள்ளனர். ஒத்திகையில் ஈடுபட்டுள்ள கிராமியக் கலைஞர்களுடன் கனிமொழி கருணாநிதி உரையாடினார்.

சென்னையில், சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா என்ற பிரமாண்ட கலைவிழா ஜன.13 அன்று தமிழ்நாடு முதல்வரால் சென்னை தீவுத்திடல் தொடங்கி வைக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து ஜன.14 முதல் ஜன. 17 வரை சென்னையின் 18 இடங்களில் கலை விழாக்கள் நடைபெறவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 18 இடங்களில் நடைபெற இருக்கும் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவில் 1500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொள்ளாவார்கள்.

தீவுத்திடல், மாநகராட்சி விளையாட்டு மைதானம்,கொளத்தூர், முரசொலிமாறன் மேம்பால பூங்கா (தெற்கு),பெரம்பூர், ராபின்சன் விளையாட்டு மைதானம்,இராயபுரம், நாகேஸ்வரராவ் பூங்கா,மைலாப்பூர், செம்மொழிப் பூங்கா, மாநகராட்சி விளையாட்டு திடல்,நுங்கம்பாக்கம், பாரத சாரண சாரணியர் திடல்,திருவல்லிக்கேணி, மாநகராட்சி மைதானம்,நடேசன் பூங்கா எதிரில், தி.நகர், எலியட்ஸ் கடற்கரை,பெசன்ட் நகர், திருவான்மியூர் கடற்கரை, மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானம்,சைதாப்பேட்டை, சிவன் பூங்கா,கே.கே.நகர், லேமேக்ஸ் பள்ளி வளாகம்,பழனியப்பா நகர்,வளசரவாக்கம், கோபுரப்பூங்கா,அண்ணா நகர்,

ஜெய்நகர் பூங்கா,கோயம்பேடு, எஸ்.வி. விளையாட்டு மைதானம்,அம்பத்தூர், அரசு அருங்காட்சியகம்,எழும்பூர்.

திமுக துணை பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி, கடந்த 2007ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது பொங்கல் திருநாளை சிறப்பிக்கும் விதமாக, அரசு சார்பில் ‘சென்னை சங்கமம்’ என்ற பெயரில் கலை பண்பாட்டு திருவிழாவைச் சென்னையில் ஒருங்கிணைத்து நடத்தி வந்தார். இந்நிலையில், 2011-ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அதிமுக ஆட்சியைப் பிடித்த நிலையில், கடந்த 10 வருடங்களாக ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சி முடக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து இன்று சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சி ஒத்திகையில் கிராமியக் கலைஞர்களுடன்  எம்பி கனிமொழி உரையாடினார். மேலும் கிராமி நடனத்தையும் கனிமொழி கண்டுகளித்தார். இந்த நிலையில் 2022-ல் இருந்து சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!