Skip to content
Home » திருச்சி….. கலெக்டர் தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு

திருச்சி….. கலெக்டர் தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு

  • by Senthil

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினத்தை  தேசிய ஒற்றுமை தினமாக  கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று  இந்தியா முழுவதும் தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டு , உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சிகள் நடந்தது. திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் பிரதீப் குமார் தலைமை தாங்கி உறுதிமொழியை வாசிக்க அனைவரும் அதனை திரும்ப கூறி உறுதி மொழி ஏற்றனர். இந்த நிகழ்ச்சியில்  மாவட்ட வன அலுவலர் கிரண்,  சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை துணை இயக்குனர் சவுமியா உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!