நெல்லையில் நயினார்….. பிரசாரம் தொடங்கினார்
திருநெல்வேலி தொகுதியில் பாஜக போட்டியிடுகிறது. இதற்காகத்தான் கடந்த சில தினங்களுக்கு முன் பிரதமர் மோடி நெல்லை பாளையங்கோட்டையில் நடந்த பிரசாரக்கூட்டத்தில் பேசினார். நெல்லைத் தொகுதி பாஜக வேட்பாளராக, நயினார் நாகேந்திரன் போட்டியிடுவார் என தெரிகிறது. அவர் தற்போது எம்.எல்.ஏவாக இருந்தபோதிலும் எம்.பிக்கும் அவர் தான் போட்டியிடுவார் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் நயினார் நாகேந்திரன் இன்று காலை நெல்லை டவுன் பகுதியில் பிரசாரத்தை தொடங்கினார். வீதி வீதியாக சென்று தாமரைக்கு வாக்களிக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.