தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட ”நீங்கள் நலமா” என்ற புதிய திட்டத்தின் மூலம் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பயனாளிகளை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு அரசுத்திட்டங்களின் பயன்பாடு மற்றும் கருத்துகளை கேட்டறிந்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினால் இன்று தொடங்கி வைக்கப்பட்ட ”நீங்கள் நலமா” என்ற புதிய திட்டத்தின் மூலம் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அரியலூர் மாவட்டம், செந்துறையிலிருந்து பயனாளிகளை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு அரசுத்திட்டங்களின் பயன்பாடு மற்றும் கருத்துகளை கேட்டறிந்தார்.
இந்நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன கலந்துகொண்டார். மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து பயனாளிகளை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு அரசுத்திட்டங்களின் பயன்பாடு மற்றும் கருத்துகளை கேட்டறிந்தார்.
பயனாளிகளைத் தொடர்பு கொண்டு அரசின் மூலம் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள் குறித்த கருத்துக்களை கேட்டறியும் புதுமையான திட்டமாக ”நீங்கள் நலமா” என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னையில் தொடங்கி வைத்து பயனாளிகளுடன் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடினார்கள்.
அதனைத்தொடர்ந்து, அரியலூர் மாவட்டம், செந்துறையிலிருந்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பல்வேறு அரசுத்துறைகளின் திட்டங்கள் மூலம் பயனடைந்த பயனாளிகளின் பட்டியலில் சிலரை தேர்வு செய்து அவர்களுடன் தொலைபேசி வாயிலாக உரையாடி அரசுத்திட்டங்களின் பயன்பாடு குறித்து கேட்டறிந்தார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.