Skip to content
Home » நேருவின் 134வது பிறந்தநாள் விழா…… நினைவிடத்தில் சோனியா, கார்கே மரியாதை

நேருவின் 134வது பிறந்தநாள் விழா…… நினைவிடத்தில் சோனியா, கார்கே மரியாதை

  • by Senthil

இந்தியாவின் முதல் பிரதமர்  ஜவஹர்லால் நேருவின் 134வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி டில்லியில்  உள்ள அவரது நினைவிடத்தில்  இன்று  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதுகுறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள கார்கே, “இந்தியாவை பூஜ்ஜியத்தில் இருந்து உச்சத்திற்கு கொண்டு சென்று நவீன இந்தியாவை உருவாக்கிய பண்டித ஜவஹர்லால் நேருவுக்கு அவரது பிறந்தநாளில்  வணக்கம் செலுத்துகிறேன்.

ஜனநாயகத்தின் மிகச்சிறந்த பாதுகாவலராக திகழ்ந்தவர். அவரது முற்போக்கு சிந்தனைகள் இந்தியாவின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தியது. அனைத்து சவால்களுக்கு மத்தியிலும், நாட்டு மக்களை எந்தப் பாகுபாடும் இல்லாமல், எப்போதும் ஒன்றாக வாழ ஊக்குவித்தவர் ஜவஹர்லால் நேரு.” என்று தெரிவித்துள்ளார்.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!