1996 முதல் 2001ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியின்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அமைச்சர்கள் கே. என். நேரு, ஐ பெரியசாமி, ரகுபதி, கோ.சி. மணி( இறந்து விட்டார்) ஆகியோர் மீது அதிமுக அரசு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. ஐகோர்ட் அனைவரையும் விடுவித்தது. பின்னர் ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து 2015ல் அதிமுக அரசு உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தது.இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்தது. காலதாமதமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக கூறி உச்சநீதிமன்றம் வழக்கை இன்று தள்ளுபடி செய்தது.