Skip to content
Home » புதுகையில் 2ம் கட்டமாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ..

புதுகையில் 2ம் கட்டமாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ..

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (10.11.2023) சென்னை கலைவாணர் அரங்கத்தில், நடைபெற்ற விழாவில்,
புதிய பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிர் பயன்பெறும் வகையில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கிடும்
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம், கலைஞர்
கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும்
ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர்  எஸ்.ரகுபதி  மகளிருக்கு வங்கி பற்று அட்டைகளை (ATM Card) வழங்கினார்.
உடன் மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா,  புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மரு.வை.முத்துராஜா அவர்கள், முன்னாள் அரசு வழக்கறிஞர்  கே.கே.செல்லபாண்டியன்  , புதுக்கோட்டை நகர்மன்றத்தலைவர்  திலகவதி செந்தில், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!