புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் கீழாத்தூர்ஊராட்சி கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய
தொடக்கப்பள்ளியில் ரூபாய் 32.80.லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிட பணியிணை ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் அப்துல் ரசூல்(வளர்ச்சி ) புதுக்கோட்டை ஆர்.டி.ஓ.முருகேசன், ஒன்றிய குழுத்தலைவர் வள்ளியம்மை தங்கமணி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள்பங்கேற்றனர்.