Skip to content
Home » அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திக்க…. அமைச்சர் சேகர்பாபுவுக்கு அனுமதி மறுப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திக்க…. அமைச்சர் சேகர்பாபுவுக்கு அனுமதி மறுப்பு

  • by Senthil

சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை  சந்தித்து உடல் நலம் விசாரிக்க இன்று காலை அமைச்சர்  சேகர்பாபு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.  அப்போது அவருக்கு  போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். இதைத்தொடர்ந்து  அவர், அமைச்சருக்கு  சிகிச்சை அளிக்கும் டாக்டர்களை அமைச்சர் சேகர்பாபு சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து  அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:

அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் இருப்பதால், அவரை சந்திக்க அனுமதி மறுத்து விட்டனர்.  எனவே டாக்டர்களை சந்தித்து பேசினேன். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எவ்வளவு  சீக்கிரம் ஆபரேசன் செய்யவேண்டுமோ அவ்வளவு சீக்கிரம் ஆபரேசன் செய்வது நல்லது என  டாக்டர்கள் கூறினர்.  அமைச்சரின் குடும்பத்தினரிடம் இது தொடர்பாக பேசி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!