2024 மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில், காங்கிரசும், பாஜகவும் மெகா கூட்டணியை தயார் செய்து வருகிறது. இந்த நிலையில் உ.பி. முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி, எங்கள் கட்சி யாருடனும் கூட்டணி அமைக்காமல் மக்களவை தேர்தலை தனித்து சந்திக்கும் என அதிரடியாக அறிவித்து உள்ளார்.
பாஜகவுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கும் நிலைப்பாட்டில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என உ.பி. காங்கிரசார் குற்றம் சாட்டி உள்ளனர்.