Skip to content
Home » எதிர்க்கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்காமல் இழுத்தடிப்பு…. திருமாவளவன் குற்றச்சாட்டு

எதிர்க்கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்காமல் இழுத்தடிப்பு…. திருமாவளவன் குற்றச்சாட்டு

விசிக தலைவர் திருமாவளவன் இன்று அரியலூரில் வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:இன்று வேட்பு மனு தாக்கல் செய்து இருக்கிறேன். 30ம் தேதி சின்ன ஒதுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படுவதாக தெரியவில்லை. பாஜக கூட்டணி கட்சிகளுக்கு மட்டும் உடனடியாக சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் இதுவரை சின்னம் ஒதுக்கவில்லை அல்லது நிராகரிக்கிறது தேர்தல் ஆணையமே ஒருதலைப் பட்சமாக செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. நேர்மையோடு இத்தேர்தலை நடத்த வேண்டும். அப்பொழுதுதான் ஜனநாயகம் காக்கப்படும். ஆகவே தேர்தல் ஆணையம் ஒருதலைப் பட்சமாக இல்லாமல் நேர்மையோடு இந்த தேர்தலை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் .

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாஜக பூஜ்ஜியம் என்று திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கூறியுள்ளார். எனவே அவர்கள் எடுக்கும் முயற்சி வெற்றி பெறாது. தென்னிந்திய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி பெரும் பின்னடைவை அல்லது தோல்வியை  சந்திக்கும்.

 

உறங்கும் நேரம் தவிர 20 மணி நேரம் எப்பொழுதும் மக்களிடம் இருக்கிறேன். மக்களுடன் பழகுகிறேன். சொந்தத் தொகுதியில் நிற்கிறேன். எனவே மக்கள் மீண்டும் என்னை தேர்ந்தெடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

உங்களது வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்று கேட்ட பொழுது,
தமிழக முழுவதும் 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும். அதிலே சிதம்பரமும் ஒன்று. இவ்வாறு திருமாவளவன் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!