Skip to content
Home » வரைவு வாக்காளர் பட்டியல் பணி…. மேலிட பார்வையாளர்கள் நியமனம்

வரைவு வாக்காளர் பட்டியல் பணி…. மேலிட பார்வையாளர்கள் நியமனம்

  • by Senthil

தமிழகத்தில் கடந்த வாரம் வரைவு வாக்காளர் பட்டியல்  வெளியிடப்பட்டது. இது பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இறுதி செய்யப்பட உள்ளது. புதிதாக பெயர்கள் சேர்ப்பவர்கள் , திருத்தங்கள் செய்பவர்கள் செய்து கொள்ளலாம். பெயர் நீக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இறுதி வாக்காளர் பட்டியல் வரும்2024   ஜனவரி 5ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 17 வயது நிரம்பியவர்களும்  வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்கலாம். அவர்களுக்கு 18 வயது ஆனவுடன் வாக்காளர் அட்டை வழங்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து  மாவட்டங்கள் தோறும் நடைபெறும்  புகைபடத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளை ஆய்வு செய்ய மாவட்டங்களுக்கு  மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை சத்யபிரதா சாகு நியமித்து உள்ளார்.  அந்த அதிகாரிகளின் பெயர்களும், அவர்களுக்கான மாவட்டங்களும் வருமாறு:

நில சீர்திருத்த ஆணையர் வெங்கடாசலம்- திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை,

இந்திய மருத்துவம் மற்றும்  ஓமியோபதி துறை ஆணையர் மைதிலி ராஜேந்திரன்- சென்னை, செங்கல்பட்டு,  திருவள்ளூர்.

சிறுதொழில் கழக நிர்வாக இயக்குனர் மதுமதி- காஞ்சிபுரம்,  வேலூர்,  திருப்பத்தூர், ராணிப்பேட்டை,  திருவண்ணாமலை.

ஜவுளித்துறை ஆணையர்  வள்ளலார்-  விழுப்புரம், கள்ளக்குறிச்சி,  கடலூர்.

மீன்வளத்துறை ஆணையர் பழனிசாமி- கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்.

வேளாண்மைத்துறை ஆணையர்  எல். சுப்பிரமணியன்- தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக இயக்குனர் பி. சங்கர்-   கோவை, நீலகிரி, ஈரோடு, நாமக்கல்.

தொழிற்கல்வித்துறை  ஆணையர் கே. வீரராகவ ராவ்-  திருப்பூர், கரூர்,  தேனி, திண்டுக்கல்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை  ஆணையர் சுந்தரவல்லி-  மதுரை, சிவகங்கை,  விருதுநகர், ராமநாதபுரம்,

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய  நிர்வாக இயக்குனர்  சரவணவேல்ராஜ்-  நெல்லை, தூத்துக்குடி,  தென்காசி, கன்னியாகுமரி.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!