Skip to content
Home » ரூ.17 லட்சம் நிவாரணம் பெற….. ரயில் விபத்தில் கணவர் இறந்ததாக நாடகம்….இளம்பெண் சிக்கினார்

ரூ.17 லட்சம் நிவாரணம் பெற….. ரயில் விபத்தில் கணவர் இறந்ததாக நாடகம்….இளம்பெண் சிக்கினார்

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே ஜூன் 2-ந்தேதி இரவு 7 மணியளவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில்  உள்பட 3 ரயில்கள் விபத்துக்குள்ளானது. இதில் 280 பேர் பலியானார்கள். 1000 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்தார். மேலும் பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும், ரெயில்வே சார்பில் ரூ.10 லட்சமும் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தனது கணவர் ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்ததாக கூறி நிவாரணத் தொகையை பெறுவதற்காக நாடகமாடிய பெண் சிக்கலில் மாட்டியுள்ளார். கட்டாக் மாவட்டத்தில் உள்ள மணிபண்டாவைச் சேர்ந்தவர் கீதாஞ்சலி தத்தா. அவரது கணவர் பிஜய் தத்தா. இருவரும் கடந்த 13 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.  கீதாஞ்சலி தனது கணவர் பிஜய் தத்தா ரெயில் விபத்தில் இறந்துவிட்டதாகவும், ஒரு உடலை தனது கணவருடையது என்றும் கூறியுள்ளார். ஆனால், ஆவணங்களைச் சரிபார்த்ததில், அவர் பொய் சொன்னது தெரியவந்தது. இதையடுத்து அவரை எச்சரித்து போலீசார் விடுவித்தனர். இந்த நிலையில் தான் மரணித்து விட்டதாக பொய் சொல்லி, பொதுப் பணத்தை அபகரிக்க முயன்ற கீதாஞ்சலி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது கணவர் பிஜய் தத்தா கீதாஞ்சலி மீது புகாரளித்துள்ளார். கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் கீதாஞ்சலி தற்போது தலைமறைவாகி உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!