Skip to content
Home » மூதாட்டியை பலாத்காரம் செய்து கொன்ற திருடன்….மதுரையில் பலாத்காரம்

மூதாட்டியை பலாத்காரம் செய்து கொன்ற திருடன்….மதுரையில் பலாத்காரம்

மதுரை திருநகரில் பேருந்து நிறுத்தம் அருகே உறங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து, தலையில் கல்லைப் போட்டுவிட்டு கொன்றுவிட்டு ஒன்றுமே தெரியாதது போல நடித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.  மதுரை திருநகர் காவல் நிலையத்தை அதிகாலை 3 மணியளவில் தொடர்புகொண்ட மர்மநபர் ஒருவர் பேருந்து நிறுத்தம் அருகே மூதாட்டி ஒருவர் இறந்து கிடப்பதாக கூறியுள்ளார்.சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றினர். அப்பகுதியில் இருந்த சிசிடிவி-களை ஆய்வு செய்தபோது, பிரபல இருசக்கர வாகனத் திருடன் அலெக்ஸ்-தான், மூதாட்டியைக் கொன்றுவிட்டு தங்க காதணிகளைத் திருடிச் சென்றது தெரியவந்தது.

அந்த நேரத்தில் கொலை நடந்த இடத்திற்கு ஒன்றுமே தெரியாததுபோல, வேவு பார்க்கச் சென்ற அலெக்சை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். போதையில் அலெக்ஸ், உறங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். பின்னர் தலையில் கல்லைப் போட்டு கொன்றுவிட்டு மூதாட்டியின் காதணிகளை திருடிவிட்டு மூதாட்டியின் செல்போனில் இருந்தே காவல் நிலையத்தை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்து உள்ளார்.  பின்னர் ஒன்றுமே தெரியாதது போல நடித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!