மஹாராஷ்டிராவில் பாலுக்குப் பதிலாகத் தாவர எண்ணெய் மற்றும் ரசாயனங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ‘அனலாக் பன்னீர்’ எனப்படும் செயற்கைப் பன்னீரின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் மற்றும் கேட்டரிங் அமைப்புகள் இந்தச் செயற்கைப் பன்னீரை நுகர்வோருக்குத் தெரியாமல் உண்மையான பன்னீர் எனப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது; உணவுப் பாதுகாப்புத் துறை நடத்திய ஆய்வில் 35 சதவீதத்திற்கும் அதிகமான மாதிரிகள் தரம் குறைந்தவை எனத் தெரியவந்துள்ளது.
