கோவை: ஆனமலை புலிகள் காப்பக வனச்சரகத்தில் சேத்துமடை அருகே நாகரூத்து பகுதியில் ஒரு வயது மதிக்கத்தக்க யானை உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளது. சடலமாக கண்டெடுக்கப்பட்ட யானையை, கால்நடை மருத்துவர்கள் உடற்கூராய்வு செய்ததில் பெருங்குடலில் அடைப்பு இருந்திருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அருகே ஒரு வயது யானை உடல்நலக்குறைவால் உயிரிழப்பு
