Skip to content
Home » ராமநாதபுரத்தில் சுயேச்சையாக ஓபிஎஸ் வேட்புமனு தாக்கல்

ராமநாதபுரத்தில் சுயேச்சையாக ஓபிஎஸ் வேட்புமனு தாக்கல்

  • by Senthil

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்  அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட நி்லையில் அவர்  அதிமுகவை   எடப்பாடியிடம் மீட்கப்போவதாக கூறி வந்தார். இந்த நிலையில்  நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து அவர்  போட்டியிடுகிறார். அவர் ராமநாதபுரம் தொகுதி்யில்   போட்டியிடுகிறார்.  அவைர பாஜக சின்னத்தில் போட்டியிட பாஜக வலியுறுத்தியது. அப்படி போட்டியிட்டால் தற்போதைய எம்.எல்.எ. பதவி பறிக்கப்படும் என்பதால் அதை ஓபிஎஸ் மறுத்து விட்டார்.

எனவே இன்று அவர் சுயேச்சையாக  வேட்புமனு தாக்கல் செய்தார். இதற்காக இன்று ராமநாதபுரம் வந்த ஓ. பன்னீர்செல்வம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஒரு  கோயிலுக்கு சென்று வேட்புமனுவை  வைத்து  சாமி கும்பிட்டார். பின்னர் அவர்  நேராக கலெக்டர் அலுவலகம் வந்து  கலெக்டர் பிரதீப் குமாரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் ராமநாதபுரம் தொகுதியை சேர்ந்த  கட்சியினரும் வந்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!