சென்னை: தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதிகரிக்கும் வெப்ப அலையால் பொதுமக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதை தடுக்க பொது சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. வெப்ப அலை காரணமாக மக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதை தடுக்க ஓ.ஆர்.எஸ்.கரைசல் வழங்க உத்தரவிட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்கள் இலவசமாக வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவையன்றி விவசாய கூலித் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகளுக்கு முன்னெச்சரிக்கையாக ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பொது மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் HEAT STROKE என்ற சிறப்பு வார்டு அமைக்கவும் தமிழக பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இத்துடன் HEAT STROKE காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
