திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக ஆவின் பால் தட்டுப்பாடு நிலவி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பால் தட்டுப்பாடு காரணமாக திருவாரூரில் உள்ள 3 ஆவின் விற்பனையகங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பால் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அதிகாலை நேரத்திலேயே விற்பனையகங்களில் கூட்டம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. வழக்கமான தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு பால் கிடைக்காததால், பால் வாங்க வருவோர் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
