Skip to content
Home » வேதாரண்யம் ஓ.எஸ்.மணியின் வெற்றி செல்லும்….. ஐகோர்ட் தீர்ப்பு

வேதாரண்யம் ஓ.எஸ்.மணியின் வெற்றி செல்லும்….. ஐகோர்ட் தீர்ப்பு

முன்னாள் அமைச்சரும், தற்போதைய  வேதாரண்யம் தொகுதி  அதிமுக எம்.எல்.ஏவுமான  ஓ. எஸ். மணியன் வெற்றி பெற்றது  செல்லாது என அறிவிக்க கோரி  அந்த தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட வேதரத்தினம்  சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.  அதில்   பொய் வாக்குறுதிகளை அவர் அளித்தார். அரசு அதிகாரிகளை தேர்தல் ஏஜெண்ட்கள் போல பயன்படுத்தியதுடன், ரூ. 60 கோடி வரை செலவு செய்தார். எனவே  அந்த வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி தண்டபாணி ,  ஓஎஸ் மணியன்  வெற்றி செல்லும் என அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!