Skip to content
Home » பாபநாசத்தில் வழக்கறிஞர் சங்க பணி… பார் கவுன்சில் துணைத் தலைவர் ஆய்வு…

பாபநாசத்தில் வழக்கறிஞர் சங்க பணி… பார் கவுன்சில் துணைத் தலைவர் ஆய்வு…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வழக்கறிஞர் சங்கத்திற்கு தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில் துணைத் தலைவர் வேலு கார்த்திகேயன் வருகை புரிந்து ஆய்வு மேற்கொண்டு உறுப்பினர்களின் விவரத்தை கேட்டறிந்தார். அப்போது பார் கவுன்சில் துணைத்தலைவர் முன்னிலையில் பாபநாசம் வழக்கறிஞர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் பாபநாசம் வழக்கறிஞர் சங்கத் தலைவராக பாஸ்கரன், துணைத் தலைவராக கம்பன், செயலாளராக இளையராஜா, பொருளாளராக பாலசந்திரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பாபநாசம் வழக்கறிஞர் சங்கத்தினை தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சிலில் பதிவு செய்து அங்கீகாரம் பெறுவது என தீர்மானிக்கப்பட்டது. மேலும் கூட்டத்தில் பாபநாசம் வழக்கறிஞர் சங்கத்தை சேர்ந்த அனைத்து வழக்கறிஞர்களும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!