Skip to content
Home » பள்ளப்பட்டியிலிருந்து நாமக்கல் , வேலூருக்கு புதிய பஸ் வழிதடம்… தொடக்கம்..

பள்ளப்பட்டியிலிருந்து நாமக்கல் , வேலூருக்கு புதிய பஸ் வழிதடம்… தொடக்கம்..

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் சட்டமன்ற தொகுதி முழுவதும் இணைக்கும் வகையாக இன்று பள்ளப்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், க பரமத்தி, தென்னிலை, வேலாயுதம்பாளையம், வழியாக நாமக்கல் மாவட்டம் வேலூருக்கு புதிய பேருந்து வழித்தடத்தினை அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மொஞ்சனுர் இளங்கோ துவக்கி வைத்தார். பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் பள்ளப்பட்டி நகராட்சி தலைவர் முனவர் ஜான், திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என

ஏராளமானோர் கலந்து கொண்டனர் செய்தியாளர்களை சந்தித்த அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ அவர்கள் தொகுதி பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கை இரண்டு மாவட்டம் இணைக்கு வகையில் பேருந்து வழித்தடம் துவக்கப்பட்டுள்ளது.மேலும் கிராம பகுதிகளுக்கு இரண்டு பேருந்துகள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் அதையும் இரண்டு வார காலத்துக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!