Skip to content
Home » பட்டுக்கோட்டையில் மது பாட்டில்கள் விற்ற நபர் கைது….

பட்டுக்கோட்டையில் மது பாட்டில்கள் விற்ற நபர் கைது….

  • by Senthil

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை டிஎஸ்பி., பாஸ்கர் உத்தரவின் பேரில், மதுக்கூர் இன்ஸ்பெக்டர் துரைராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் ஆகியோர் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை நடத்தினர். இதில் மதுக்கூர் விக்ரமம் மகேஷ் (46) என்பவர் அனுமதியின்றி மது விற்கும் போது கையும் களவுமாக பிடிபட்டார். அவரிடம் இருந்து 23 குவாட்டர் மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மது விற்பனை செய்து வைத்திருந்த பணம் ரூ.6, 750 ஐ போலீசார் கைப்பற்றினர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேசை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!