Skip to content
Home » பெரம்பலூரில் நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்றம்…

பெரம்பலூரில் நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்றம்…

மக்கள் நீதிமன்றத்தில் ஒரு அமர்வு மற்றும் ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் பெரம்பலூர் சார்பு நீதிபதி A.அண்ணாமலை மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிபதி மகாலட்சுமி கலந்து கொண்டனர் சமரச பேச்சுவார்த்தைக்கு 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு அதில் மோட்டார் வாகன விபத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் மட்டும் (5) ஐந்து மட்டும் சமரசமாக முடித்து வைக்கப்பட்டது.

இதில் இழப்பீட்டுத் தொகையாக 36 லட்சத்து 17 ஆயிரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பீட்டு நிறுவனம் இடம் இருந்து பெறப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.
இதில் வழக்கறிஞர்களும் காப்பீட்டு நிறுவனத்திரும், பொதுமக்களும் கலந்து கொண்டனர் இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியும் ஆகிய எஸ். சந்திரசேகர் செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!