Skip to content
Home » பெரம்பலூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்..

பெரம்பலூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்..

பெரம்பலூர்  மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம்  தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (30.10.2023) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டுமனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக் கூலி உதவித்தொகை,  பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 407 மனுக்கள் பெறப்பட்டது.

இன்றைய கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் பேரூராட்சியைச் சார்ந்த திருமதி தமிழரசி என்பவருக்கு மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் இலவச வீட்டுமனைப் பட்டாவினை வழங்கினார்.

பட்டா வேண்டி பலமுறை மனு கொடுத்தும் கடந்த நான்கு வருடங்களாக எந்தவித நடவடிக்கையும் இல்லை. கடந்த மாதம் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பட்டா வேண்டி மனு கொடுத்தேன் ஒரு மாத காலத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு எனக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டிருக்கிறது, இதற்காக எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்  என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்  அ.லலிதா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் மு.கார்த்திக்கேயன், மற்றும் அனைத்து துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.பெரம்பலூர் மாவட்டம்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் நடைபெற்றது.
—————————————————————–
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (30.10.2023) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டுமனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக் கூலி உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 407 மனுக்கள் பெறப்பட்டது.
இன்றைய கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் பேரூராட்சியைச் சார்ந்த திருமதி தமிழரசி என்பவருக்கு மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் இலவச வீட்டுமனைப் பட்டாவினை வழங்கினார்.
பட்டா வேண்டி பலமுறை மனு கொடுத்தும் கடந்த நான்கு வருடங்களாக எந்தவித நடவடிக்கையும் இல்லை. கடந்த மாதம் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பட்டா வேண்டி மனு கொடுத்தேன் ஒரு மாத காலத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு எனக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டிருக்கிறது, இதற்காக எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.லலிதா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் மு.கார்த்திக்கேயன், மற்றும் அனைத்து துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!