பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தொழிலாளர் நலத்துறையின் சார்பில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் இன்று (09.02.2023) ஏற்றுக்கொண்டனர். கொத்தடிமை தொழிலாளர் முறையினை ஒழித்திட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கல்குவாரிகள், செங்கல் சூலைகள் உள்ளிட்ட
தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் அடிக்கடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு கொத்தடிமைகள் மீட்கப்பட்டு வருகின்றனர். அதனடிப்படையில் அனைத்து அரசு அலுவலர்களும் கொத்தடிமை தொழிலாளர் முறை உறுதிமொழியினை எடுத்துக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளதை தொடர்ந்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர்.