Skip to content
Home » பெரம்பலூரில் சட்ட விரோதமாக மது விற்ற நபர் கைது…

பெரம்பலூரில் சட்ட விரோதமாக மது விற்ற நபர் கைது…

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா மற்றும் சட்ட விரோதமாக மதுவிற்பனை, தயாரித்தல், ஊறல் போடுதல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இன்று 04.03.2024 -ம் தேதி பெரம்பலூர் மாவட்டம் கை.களத்தூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட நூத்தப்பூர் கிராம பகுதியில் அரசு மதுபானத்தை கள்ளத்தனமாக விற்பதாக கிடைத்த இரகசிய தகவலின்படி கை.களத்தூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சண்முகம் மற்றும் அவரது குழுவினர் சிறப்பு ரோந்து மேற்கொண்டுவந்த நிலையில் சிவக்குமார் (46) த/பெ தங்கவேல், மாரியம்மன் கோவில் தெரு, நூத்தப்பூர் பாளையம், நூாத்தப்பூர், வேப்பந்தட்டை வட்டம், பெரம்பலூர் மாவட்டம் மற்றும் அவரது மனைவி ராதா (40) க/பெ தங்கவேல் மாரியம்மன் கோவில் தெரு, நூத்தப்பூர் பாளையம், நூாத்தப்பூர், வேப்பந்தட்டை வட்டம், பெரம்பலூர் மாவட்டம் என்ற நபர்கள் நூத்தப்பூரில் உள்ள தனது வீட்டின் பின்புறம் சட்டத்திற்கு புறம்பாக மதுபாட்டில்களை விற்பனை செய்துகொண்டிருந்தவர்களில் ராதா என்பவர் தப்பியோடினார். மேலும் இதில் சிவக்குமாரை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரிடமிருந்து 180 மிலி அளவுள்ள பிளாக் பேல் பிராந்தி 19 பாட்டில்களும், 4 பீர் பாட்டில்களும், பறிமுதல் செய்தனர். பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி கை.களத்தூர் காவல்நிலைய காவல்துறையினர் மேற்படி எதிரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!