Skip to content
Home » சாலை விபத்து… ஒருவர் பலி…. பெரம்பலூர் அருகே உறவினர்கள் சாலை மறியல்…..

சாலை விபத்து… ஒருவர் பலி…. பெரம்பலூர் அருகே உறவினர்கள் சாலை மறியல்…..

  • by Senthil

பெரம்பலூர் அருகே பேரளி கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி மகன் பிரபாகரன். இவர் மதியம் 3.30 மணியளவில்
பைக்கில் பெரம்பலூர் நோக்கி சாலையின் இடதுபுறம் வந்து கொண்டிருக்கும் பொழுது அதற்கு பின்னால் வந்த டிப்பர் லாரி, க.எறையூர் பிரிவு பாதை இடதுபுறம் நுழையும்போது லாரி பிரபாகரன் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பிரபாகரன் சம்பவஇடத்திலேயே இறந்துவிட்டார்.

இதனால் பிரபாகரன் மனைவி ரம்யா மற்றும் உறவினர்கள் நேற்று மாலை வாகனம் அதிவேகமாகவும் அதிக பாரம் ஏற்றி வரும் டிப்பர் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். க.எறையூரில் இயங்கும் கல்குவாரிகளை மூட வேண்டும். இறந்த நபரின் குடும்பத்தாருக்கு நிவாரணம் வழங்க வேணடும் என கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த பெரம்பலூர் டிஎஸ்பி பழனிசாமி மறியலில் ஈடுபட்டோர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறியதின் பேரில் சாலை மறியலில் கைவிட்டு மக்கள் கலந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!